Showing posts with label DMK. Show all posts
Showing posts with label DMK. Show all posts

Wednesday, April 29, 2009

வாழும் வள்ளல் மக்களின் தொண்டன் ஏழைகளின் பாரி இராமநாதபுரம் மக்களின் வீரத்தளபதி அண்ணனுக்கு ஜெ!


                   யார் எள்ளி நகையாடினாலும் , கேலி செய்தாலும் , எதையும் பொருட்படுத்தாது மக்களுக்காக உழைக்க  இந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தொகுதி திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள எங்கள்   வீரத்தளபதி ஜெ.கே.ரித்திஷ் (எ) சிவக்குமார் அவர்களின் ஆசியால்   இராமநாதபுரம் மக்களுக்கு கிடைத்த நன்மைகளை பற்றிய ஒரு தேர்தல் நேர சிறப்பு பதிவு.

     முதலில் இராமநாதபுரத்து மக்களை ஒரு நடிகன் தங்கள் ஊரில் இருந்து சென்று இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார் என பெருமை கொள்ள செய்தார்.மக்கள் இலவசமாக ஒரு திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க முடியும் என்று நிரூபித்து காட்டினார்.எந்த ஒரு பின்பலம் இல்லாமல் ஆளனபட்ட இரஜினியின் குசேலேனே மண்ணை கவ்விய போது ,தன்னம்பிக்கையுடன் தன்னை கேலி செய்த கோடம்பாக்கத்தை தனது சிறந்த நடிப்பால் நாயகனை தமிழகம் முழுவதும் 100 நாள் ஓடச்செய்தார் .

       மந்திரியே வந்தாலும் குவார்ட்டர் அடித்து குப்புற கிடக்கும் குடிமகன்களை , தன்னுடன் சேர்த்துக்கொண்டு ,இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும்  இரண்டு வருடங்களுக்கு முன்பே சூராவளி சூற்றுபயணம் சென்று வந்தார். வலை மக்களே நீங்கள் யோசிக்க வேண்டிய ஒன்று , சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே ஒவ்வொரு ஊராக வலம் வராத பொழுது மக்களை சந்திக்க வேண்டும் என்று ஊர் ஊராக  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மக்களை சந்தித்து எந்த ஒரு பிரதிபலன்பாரமல் இல்லை என்று சொன்னவர்க்களுகெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்தார்.

          இதை தன்னுடைய படமான நாயகனில் இருந்தாக்கா அள்ளி கொடு , தெரிஞ்சாக்கா சொல்லி கொடுன்னு சொல்லி, சொன்னதை செய்தார் . சொல்லாததையும் செய்தார்.

          தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கிய வீரமில்லா மக்களுக்கு எதிராக வீரமுள்ள தமிழர்க்காக ஜல்லிகட்டு காப்பாற்றும் கழகம் அமைத்து, கழகத்தை தமிழகம் முழுவதும் பரப்பி , இன்று பெருந்திரளான மக்களின் சார்பாக நீதிமன்றத்திலே வழக்காடிகொண்டிருக்கிறார்.

        இருக்கிற அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் போது தன் பணத்தை மக்களுக்காக எந்த ஒரு பதவியில் இல்லாமாலும் பிரதிபலன்பாராமல் செலவு செய்தார்.

        கடைசியாக என் ஊர் சிறுவர்கள் கிரிகெட் போட்டி நடத்துவதற்க்காக 1000 ரூ கேட்டதற்க்கு புன்னகையோடு 5000 ரூ தந்தார்.மேலும் எங்க ஊர் கோவிலின் வெளிபுர சுவரை கட்டி தருவதாக சொல்லி சென்ற மறுநாளே ,ஒரு லாரி மண்ணை இறக்கி வேலையை ஆரம்பித்து விட்டார்.அரசியல்வாதிகள் பதவியில் இருந்தாலுமே செய்வோம் என்று சொல்லி மறக்கும் காலத்திலே அடுத்தநாளே வேலையை ஆரம்பித்ததை என்னவென்று சொல்வது.

      ஆகவே இதை படிக்கும் இராமாநாதபுர நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலை பதிவு மக்களே உங்கள் வாக்குகளை வாழும் வள்ளலுக்கு பதிவு செய்யுங்கள் முடியாதவர்கள் உங்கள் உற்றார் உறவினரை வாக்களிக்க செய்யுங்கள்.
     
     மற்ற மக்கள் வள்ளளை எள்ளி நகையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி வால்பையன்.


BJP,Congress,Lokhsabha 2009,Indian parlimentary Election,DMK,JK Rithish

Saturday, February 28, 2009

அமெரிக்காவின் பரிதாபம்-50 லட்சம் பேருக்கு வேலை இல்லை!

வாஷிங்டன்: அமெரிக்காவின் வரலாற்றிலேயே கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவாக அங்கு வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் 6 லட்சத்து 67 ஆயிரம் பேர் வேலையில்லாதோருக்கான நிவாரண நிதியைப் பெற விண்ணப்பித்துள்ளனராம்.

கடந்த 1982ம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவில் அதிக அளவிலான பேர் வேலையில்லாதோருக்கான நிதியைக் கோரி விண்ணப்பித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

பிப்ரவரி 14ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அமெரிக்காவில் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை 51 லட்சத்து 12 ஆயிரம் ஆகும். 1967ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த அளவுக்கு வேலை இல்லாதோர் இருப்பது இதுவே முதல் முறையாகும்.

வரும மாதங்களில் வேலை இல்லாதோருக்கான நிதியைக் கோருவோரின் எண்ணிக்கை ஏழரை லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வார காலங்களில் வேலையில்லாதவர்களின் சராசரி எண்ணிக்கை 49 லட்சத்து 32 ஆயிரத்து 250 ஆக உள்ளது. இது கடந்த வாரத்தை விட 89 ஆயிரத்து 250 அதிகமாகும்.

இதற்கிடையே வேலையில்லாதோருக்கான நிவாரணத் தொகை 25 டாலர் அதிகரிக்கப்பட்டு 300 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர 2400 டாலர் வரை வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


DMK , INDIA,LOKHSABHA 2009,Parlimentary Elections, BJP,Advani,Congress