Tuesday, February 28, 2012

iPhone, iPad க்கு உகந்த 'சிவகாமியின் சபதம்' நாவல் முழுவதும்

https://docs.google.com/folder/d/0B3vRZ8e3h1oaYnBrQUp5OU1BbG8/edit IOS,ANDROID சாதனங்களில் உபயோகித்துகொள்ளலாம்.


நன்றி

Wednesday, May 25, 2011

iPhone, iPad க்கு உகந்த 'பொன்னியின் செல்வன்' நாவல் முழுவதும்



http://palipedam.blogspot.com/2011/02/iphone-ipad.html

இதை பார்த்தது நானும் எனது பங்குக்கு அனைத்து பாகங்களையும் epub வடிவாக மாற்றியுள்ளேன்.


https://docs.google.com/folder/d/0B3vRZ8e3h1oaYnBrQUp5OU1BbG8/edit
iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் உபயோகித்துகொள்ளலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகான எனது பதிவு இது.

நன்றி

Wednesday, September 16, 2009

என்னத்த சொல்ல?

காதல் வயப்பட்ட என்னுடைய இரண்டு நெருங்கிய நண்பர்கள் . ஒருத்தன் காதலியால் நல்ல மாப்பிள்ளை கிடைத்ததும் ஏமாற்றப்பட்டான் நான்கு வருட காதல்.இன்னொருவன் 10 வருட காதலை வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் கழட்டிவிட்டு இன்னொருத்தியிடம் காதல் போதையில் திரிகிறான்.காதல்னா என்ன பாஸூ?

-------------------------------------------------------------------------------------------------
பெங்களூர் பதிவர் சந்திப்பு நடத்தலாம்னு ஜோ அண்ணத்தே சொன்னதும் சரினு சொல்லிட்டு. அன்னிக்காச்சும் எப்படியாவது பார்த்திரனும்னு நினைச்சுட்டு இருந்தா அன்னிக்குனு நண்பர்களின் அன்பு தொல்லையால் இண்டர்வீயுவுக்கு போனேன்.பிளான் பண்ண சந்திப்பும் நடக்கல,பிளான் பண்ணி போகாம போன இண்டர்வியுவும் விளங்கல

-------------------------------------------------------------------------------------------------
வெள்ளிக்கிழமை நண்பர்கள் கூட்டம் உபா கடையில் நடத்திகிட்டு இருக்கும் போது ஒருத்தர் தமிழ் பேசுவதை பார்த்துட்டு எந்த ஊர் அப்படினு கேள்விகளை கேட்டு இம்சைய போட ஆரம்பிச்சுட்டாரு.மதுரைனு சொன்னதும்எனக்கு அஞ்சாநெஞ்சனை தெரியும்,அவர் பெங்களூர்க்கு வந்தா என்னை பார்க்காம போகமாட்டாரு, என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லுங்கனு செல் நம்பர் கொடுத்தார் வேற வழியில்லாமல் போனில் நோட் பண்ணுற மாதிரி நடிக்க வேண்டியதா போயிருச்சு.நல்ல வேளையா இன்னொரு அடிமை வந்து நான் சென்னைனு சொன்னதும் நைசா நாங்க கழட ஆரம்பிச்சோம் அப்போ என் காதுல எனக்கு தயாநிதிய....

-------------------------------------------------------------------------------------------------

நேற்று பார்த்த ஜுனியர் சிங்கர்ல சீனியர்கள்(ஆம்) வைச்ச பேருல ஜொள்ளு ஜக்கமா,நிக்காத நித்தியஸ்ரி,ஜிப்பா ஜிகிர்தாண்ட,சரக்கு சரவெடி.. நிறைய பேருக்கு பிளாக் புனை பேர் வைக்க அத பாருங்க..அப்புறம் விஜய் டிவிக்கு யாராச்சும் இந்த டிடி(கொசு) தொல்லை தாங்க முடியல மருந்து அடிச்சு விரட்டுங்கனு சொல்லுங்கப்பா.. முடியல...


Wednesday, September 2, 2009

நானும் ஒரு கையாலாகாதவன்


என்ன எல்லோருக்கும் தெரியுமா ஏற்கனவே .. இருந்தாலும் நானே ஒத்துக்கொள்கிறேன்.

பல நேரங்களில் என் கையாலாகதனத்தை கண்டு வெட்கி மனத்துயர் உற்றிருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தவை என் மனதை வாட்டி எடுக்கிறது.அதன் வெளியேற்றமே இது.

நான் பள்ளியில் படிக்கும் போது நல்லா படித்தாலும் என் நண்பர்கள் வட்டாரம் திமிர் கெத்து சேட்டை படிப்புனா என்ன என்று கேட்ட்கும் பசங்களோடதான்.அவர்கள் நட்பு வகுப்பில் உள்ள மத்த பசங்களை ஓட்டுவதற்கும் ,அடிப்பதற்கும் , பயப்பட வைப்பதற்கும் தேவைபட்டது.முக்கியமா நம்மல நம்ம கூட்டத்த தவிர எவனும் என்னனு கூட கேள்வி கேட்க மாட்டார்கள்.அப்படி ஒரு கும்பல் என்னுடையது நான் மேல்நிலைப்பள்ளியில்
படிக்கும் போது. அதற்காக நான் வருந்தவோ வெட்க்கப்படவோ செய்யவில்லை அப்போது.என்னுடைய பள்ளியில் வன்முறை அடிதடி சாதாரணம் உபயம் மதம் மற்றும் ஜாதி.தினம் ஒரு நாள் சண்டைய பார்க்கலேனா அய்யோ இன்னிக்கு வடை போச்சேனு வருந்திய காலம் உண்டு.

ஒரு தடவை என் நண்பன் ஒருவன் அவனுடை நண்பர்கள் ஐவருடன் சேர்ந்து கீழ்பிரிவு மாணவனின் காலை விறகு கட்டையால் அடித்து உடைத்து அவனை இரண்டு வருடம் நடக்க முடியாமல் செய்தனர் .அப்பொழுதெல்லாம் என் நண்பன்தான் காலை உடைத்து என்று பெருமை(?)யுடன் சொல்லி கொண்டிருந்தேன்.(அவன் இதனால் தீண்டாமை பிரிவு வழக்கு பள்ளி மாற்றம் என பல இன்னல்களை சந்தித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறான்) . வேறொரு சமயம் என் நண்பன் பால் குடம் எடுத்தான் அவனுடன் சென்றிருக்கும்போது ஏற்பட்ட தகராறில் எங்கள் கூட்டம் விளாசுவதை பார்த்த போலீஸ் எங்கள் அருகில் வந்து விரட்டிய போது மிரண்ட என்னை தன்னருகில் இழுத்த மாலை போட்ட நண்பனால் தப்பித்தேன் இல்லைனா அன்னிக்கு போலீஸ் என் டங்குவாரா அத்திருப்பானுக.என் கூட்டத்தில ஒருத்தன் மாட்டிட்டான் அவன் பாதத்தில் போலிஸ் போட்ட ஒத்தடத்துக்கு ஒரு வாரம் நடக்க முடியாமல் திரிந்தான்.அப்பவும் அந்த அடிதடியா பெருசா சொல்லி கொண்டிருந்தேன் துளி கூட வருத்தம் இல்லாமல்.செங்கலால் இன்னொரு வகுப்பு மாணவனை மண்டைய உடைச்சது,ரோட்டில் சும்மா போன முப்பது வயசு ஆளை கன்னத்தில் பளீர் என்று விட்டது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் ஒன்றில் கூட நான் யாரையும் அடிச்சது இல்லை .சத்தியமாங்க நம்புங்க.வேடிக்கை மட்டுமே பார்த்தேன்.ஆனால் அப்போதெல்லாம் வெட்கப்படாத வயசு இன்று இதையெல்லாம் நினைத்து கூனி குறுக செய்கிறது.

நான் அலுவலகத்திற்க்கு பேருந்தில் செல்லும் போது ஐபாடில் பாட்டு கேட்பது வழக்கம்.அன்றும் அப்படியே. தீடிரென்று ஒருத்தன் என் மேல விழுந்தான் என்னனு பார்த்தா இரண்டு சிறுவர்கள்(1 அல்லது 2 பியூசி மாணவர்கள்) ஒரு இருபத்தைந்து வயது ஆளை குத்து குத்துனு இரண்டு பக்கமும் குத்துறாய்ங்க.அந்த ஆள் கண்ண பிடிச்சுட்டு உக்காந்துட்டார் அப்பவும் அவர்கள் விடலை , டிரைவர் வண்டிய நிப்பாட்டினதும் கண்டக்டர் அவர்கள் மூவரையும் இறங்க சொல்லிட்டார். அப்பொழுதுதான் அந்த ஆளை பார்த்தேன் இரண்டு கண்கள் முழுவதும் இரத்தம் எங்கிருந்து வந்ததுனு தெரியலே மூக்கிலும் இரத்தம் , பேருந்து படிக்கட்டு முழுவதும் இரத்தம்.பஸ்ஸில் இருந்த ஒருவரும் இதை தடுக்கவே இல்லை என்னையும் சேர்த்து.யார் மேல் தப்புனு தெரியல ஆனால் யார் தப்பு செய்திருந்தாலும் அந்த அளவிற்கு அடித்திருக்க கூடாது.சிறுவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்களே என்று அன்றுதான் வருத்தம் அடைந்தேன் . மேலும் சண்டை நடந்ததை வேடிக்கை பார்த்துவிட்டு அய்யோ இவ்ளோ ரத்தமா என்று நினைக்க மட்டும் செய்துவிட்டு அடிபட்டவரை மருத்துவமனைக்கோ அல்லது அவர்கள் அடிக்கும் போது தடுப்பதற்கோ எள்ளலவும் முயற்சிக்காத நான் கையாலாகவதன் தானே.

டிஸ்கி:
--------
போன வாரம் கூட ஒருத்தன் மச்சான் நம்மட்ட சண்டை போட புதுக்கோட்டைல இருந்து ஸ்கார்ப்பியோல வந்த நாலு பேரை புரட்டி எடுத்து,வண்டிய நொறுக்கி ஓட ஓட விரட்டினோம்ல என்று சொன்னபோது மச்சான் பெருமையா இருக்குனு சொன்னேன்.

Thursday, August 27, 2009

என்னத்த சொல்ல?

இரண்டு வாரங்களுக்கு முன்பு திருப்பதி சென்று வந்தேன் , பெங்களூர்ல இருந்து டிரெயின்ல கிளம்புனது முதல் பாக்குற அத்தனை பேரும் முகமூடி கொள்ளையர்கள் மாதிரி முகமூடிய போட்டு பயமுறுத்திக்கிட்டே வந்தாங்க. திருப்பதி போனாலும் நிக்கிற போலிஸ் ,சீட்டு கொடுக்குற அலுவலர் ,ரூம் ஒதுக்குற பணியாளர் , க்யூல பக்கத்துல நிக்கிறவர் முதல் பூசாரி வரை முகமூடி மயம்தான்.. பாவம் ஏழுமலையானுக்கு மட்டும் மாட்ட மறந்துட்டாங்க..

ஒரு வேளை ஏழுமலையான் அவரே பார்த்துக்குவாருனு விட்டுட்டாங்களோ ?

இந்த பன்னித் தொல்லை தாங்க முடியல ராமா.....

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

போன வாரம் உறவினரின் திருமணத்திற்க்காக முதல் நாள் இரவு மஹாலுக்கு செல்லும் வழியில் ஹைவே பேட்ரல் என்னை நிறுத்தினார்கள்.லைசென்ஸ் ,பைக் புக் இரண்டும் இல்லை என்னிடம்.அவர்கள் எடு என்று சொன்னதும் இல்லை என்று சொல்லிவிட்டேன்.ஊர் பேரு என்ன பண்றனு கேட்டதும் பெங்களூர்ல வேலை பாக்குறேன் கம்ப்யூட்டர் பொட்டி தட்டுறேனு சொன்னதும்.உன்மேல கேச போட்டு எங்க போய் தேடுறதுனு ஐயாவ போயி பாருனு இன்ஸ்கிட்டே அனுப்புனாங்க.இன்ஸ் சாருக்கும் அதே பதில சொல்லிட்டு கல்யாணத்துக்கா வண்டி எடுக்க வேண்டியாதாயிருச்சு இல்லேனா பைக்ல வந்திருக்கமாட்டேன் சார்னு சொன்னேன்.பக்கத்துல உள்ள ஏட்டு ஐயா எவ்ளோ வாங்கனு காத கடிச்சிட்டு இருக்கும் போதே போ தம்பினு இன்ஸ் பெரிய மனசோட அனுப்பி வச்சார்.நான் எப்போ செஞ்ச புண்ணியமோ முதல் நாள் நைட்டு அடிச்ச கிர்றாலே அன்னிக்கு உள்ள உபா ஏத்தல..

காசு வாங்கமா போலீஸ் விட்டுட்டாங்க அவ்ளோ நல்லவங்களாயிட்டாங்களா ?

அப்புறம் திரும்பவும் அன்னிக்கு மகாலுக்கு போய் சேரும் முன் வேறொரு இடத்துலயும் ஊத சொல்லிட்டு லைசென்ஸ் இல்லேனாலும் போக சொல்லிட்டாங்க..

ஒரு வேளை லைசென்ஸ் தேவை இல்லையோ இனி?

எது எப்படியோ எனக்கு பைசா மிச்சம்..
---------------------------------------------------------------------------------------------------------------------------------

ரெண்டு நாளைக்கு முந்தி வேலுபிரபாவின் காதல்கதை பார்த்தேன் .. சரியான தலைப்பு தேர்வு செய்திருக்கிறார்கள் படத்துக்கு.. அத்தனை காதல் கதைகள் அதும் வெரைட்டியான காதல கதைகள் , இளவயசு காதல்,நல்ல காதல், கலப்பு காதல்,காம காதல்,பெருசு காதல் ,கள்ள காதல்,பெருசு-சிருசு காதல் அத்தனை காதலும் ஒரே படத்தில்..

நல்லாத்தானே இருக்கு படத்துக்குள்ளே படம், என்ன கொஞ்சம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு யோசிச்சுபுட்டாப்புலய அதான் இங்கே ஓடலேனு நினைக்குறேன்..

---------------------------------------------------------------------------------------------------------------------------------