Friday, July 31, 2009

ஆஃப்பாயில்

நல்ல சரக்கு விக்கிற இடத்துல கள்ள சரக்கு இல்லாமல் இருக்குமா ? அப்படி நல்ல சரக்கு மத்தியில கொஞ்சம் கள்ள சரக்கு ..
ஃப்ரியாதான் குடுக்குறேன் உங்களுக்கு..

நம்ம சரக்கு
-----------------

சரக்கின் வாசத்தில்
போதமகனின் அழுகையில்
வாந்தியின் நாற்றத்தில்
குடிகாரன் ஆடலில்
எல்லோருக்கும்
போதை உண்டு
யாரேனும் என்னோட
வேட்டியை பார்த்தீர்களா?

------------------------------------
நம்ம சரக்கு
-----------------

சரக்கடிக்க
ஆசைப் பட்டேன்
சரக்கு
தீரும் வரை.

சரக்கு
தீர்ந்த பின்
மீண்டும் சரக்கு ஏத்த
ஆசை..

-------------------------------------
நம்ம சரக்கு
-----------------

காத்திருப்பேன் உனது வருகையில்
வந்துவிடு மொத்தமா நொடியில்
(வேறேண்ண ஆஃப்பாயில்தான்)

வாந்தி எடுக்கவா மொத்தத்தையும் ஏத்தி,
போதையா இருக்கும் கொஞ்சமா ஏத்து.

---------------------------------------
நம்ம சரக்கு
-----------------

போதை
ஏறியது
அது
வந்தது;
முதல் மது;
முதல் போதை.
இது இப்படித்தான்
போதை ஏறியது;
ஒவ்வொரு சொட்டும்
உள்ளூர உணர்த்தியது;
தவிர்த்திருக்கலாம்
தவறிவிட்டது
இல்லை தவறாமல்
வந்துவிட்டது.
அந்த மது
அப்படித்தானோ
தன் பிறவிபுத்தியை
காட்டிவிட்டது
வந்து விட்டது
இனி.........,
என்ன?
எப்படி?
எவ்வாறு?
தண்ணீர் ஊற்றி
வாயை விரக்தியுடன்
அலசிக்கொண்டேன்

-------------------------------------------
நம்ம சரக்கு
-----------------

3 ரூ. டீக்காக
கொடுத்த பத்து ரூபாயில்,
2 ரூபாய் சில்லறை
அவர் பாக்கெட்டுக்கு,
ஐந்து ரூபாயாவது
திருப்பித் தருவாரா?
டீ கடையில்
கத்தும் இதே மனதுதான்
காஃபி டேயில்
ஐம்பது ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது

--------------------------------------------

டிஸ்கி:
-----------
இந்த கள்ள சரக்க ஏற்கனவே நீங்க நல்ல சரக்கு கிடைக்குமிடத்தில் பருகிருக்கலாம் , இருந்தாலும் மொத்தமா சரக்கு அடிப்பது சுகம்தானே அதான் .

Friday, July 24, 2009

கேக்ககூடாத கேள்விகள் பத்து .

எந்த இடத்துல எப்படில்லாம் கேள்வி கேக்க கூடாதோ அப்படி கேட்டால் வரும் பதில்கள்.அபியும் நானும்ல பிரகாஷ்ராஜ் மனோக்கு சொல்வாரே அது போல சில.

1.திரையரங்குகளில் நிக்கும் போது தெரிந்தவன் யாரச்சும் வந்தானா , அவன பாத்து என்ன மச்சி இங்க என்ன பண்ணீட்டு இருக்கே . படம் பாக்க வந்தியா ?

உனக்கு தெரியாதா , நான் இங்கதான் பிளாக்ல டிக்கெட் விக்கிறேன் உனக்கு வேணுமா ?

2.பேருந்துல போய்ட்டு இருக்கும்போது , ஒரு குண்டு அம்மா ஹீல்ஸ் அதும் குச்சியா இருக்குமே அப்படி ஒண்ண கால்ல போட்டுட்டு நம்ம கால்ல மிதிச்சுட்டு, சாரி வலிக்குதா ?

இல்ல இல்ல பரவால்ல , நான் மயக்கத்துல தான் இருக்கேன் வலிக்காது ஏன் இன்னொரு தடவை நீங்க டிரை பண்ணி பார்க்கலாமே.

3.சாவு வீட்ல கண்ணீர் பெருக்கெடுத்து அழுதுகிட்டே, ஏன் ஏன் இவ்ளோ பேர் இருக்கும்போது இவர மட்டும் ?

ஏண்டா நாரவாயா , அப்போ இவனுக்கு பதிலா நீ போறீயா ?

4.ரெஸ்டாரெண்ட்ல ஆர்டர் கொடுக்கும் போது சர்வர்ட்ட ,இங்க தோசை நல்லா இருக்குமா?
தோசை நல்லா ஸ்ட்ராங்காவும் டேஸ்டாவும் இருக்கும் சார் , கொஞ்சம் சிமெண்ட் போட்டு , அப்போ அப்போ அதுல துப்பி வச்ச மாவுல போட்டது சார்.

5.ஏதாச்சும் திருமணவிழாவுல பார்ர்குற தூரத்து மாமிக , ஏண்டா இவ்ளோ பெரியாளாயிட்டே அடையாளமே தெரியல ?
அதுலா சரி நீங்க என்னமோ சிறிசாயிட்ட மாதிரி பேசுறீங்க..

6.கல்யாண பத்திரிக்கை கொடுக்க வரும் பெண்ணிடம் , என்னடி மாப்ள நல்ல குணமா ?
மாப்பிள்ளை ரெண்டு கொலை , நாலு கற்பழிப்பு , பத்து கொளை பண்ணியிருக்காரம் . பயபுள்ள பயங்கரமா குடிக்குமா . நிறைய பெண்டுக சகவாசம் கூட உண்டாம்.எல்லாம் பணத்துக்காகதான் அவர கட்டிகிறேன்.

7.நைட் ரெண்டு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருக்கும் போது போன அடிச்சி , என்ன மச்சான் தூங்கிட்டு இருக்கியா ?

இல்ல மாப்ள , ஆப்ரிக்கால உள்ள ஜூலு மக்கள் கல்யாணம் பண்ணுவாங்களானு ஆராய்ச்சி பண்ணிட்டுருக்கேன்.நான் தூங்கிட்டு இருக்கேனு நினைச்சியா , ஏண்டா உனக்கு இப்டி புத்தி வேலை செய்யுது.

8.யாராச்சும் முடி வெட்டிட்டு வந்தா , என்னடா முடி வெட்டிருக்கே போல ?
இல்லடா இலையுதிர் காலம் போல இது முடியுதிர்காலம் அதான் முடி உதிந்திருச்சு.

9.புகை வண்டி விடுகையில் ,நீ ஸ்மோக் பண்ணிவியா ?

அய்யோ இல்லை இது சூழ்ச்சி . நான் சாக்பீஸதான் வாயிலே வச்சிருந்தேன் ,எப்படி புகை வருதுனு தான் தெரியல.

டிஸ்கி:
---------
யாராச்சும் பத்துனு சொல்லிட்டு ஒன்பதுதான் இருக்குனு கேட்டிங்கண்ணா , அந்த கேள்விதான் பத்தாவதுங்கோ

Friday, July 10, 2009

படித்ததில் பிடித்தது ..


கதை ?

இது ஒரு sudden fiction கதை வடிவம் -நெட்டில் படிக்க கிடைத்தது(சுஜாதா சொல்லியது ) -இதன் அர்த்தத்தை சொல்கிறவர்கள் மிகவும் புத்திசாலிகள்(நான் விடையை பார்த்துதான் புரிந்து கொண்டேன் ). இனி அந்த கதை :


ஒரு அப்பா, ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது.

பெற்றோர்களுக்கு ஒரு தினம் ஆஸ்பத்திரியிலிருந்து டெலிபோன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும். உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்; அதற்குள் என்ன நேர்ந்துவிடுமோ என்று கவலைக் கடலில் இரவெல்லாம் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது:

டெலிபோன் மணி அடிக்கிறது. பதற்றத்துடன், பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.

"ஹென்றி இருக்கிறானா?" என்கிறது ஒரு பெண் குரல்.
"ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை; தப்பு நம்பர்" என்று வைத்துவிடுகிறார்.

மறுபடியும் சில நிமிஷம் கழித்து டெலிபோன் அடிக்கிறது.
"ஹென்றி இருக்கிறானா?" அதே பெண்.
"மிஸ், உனக்கு என்ன நம்பர் வேண்டும்?"
"5365849"
"என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச் சுழற்றுகிறாய் போலிருக்கிறது"
"ரொம்ப தாங்க்ஸ்" என்று அந்த பெண் வைத்துவிடுகிறாள்.
சில நிமிஷம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மொக்கை

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார்?

"அதை மறைத்து வைத்தவர் யார் என்று முதலில் நீர் சொல்லும்...'

மிகப் பெரிய கண்டம் எது?

"வாழ்வில் எத்தனையோ கண்டங்களைத் தாண்டி வந்து விட்டேன். அதில், இந்தப் பரீட்சை தான் மிகப் பெரிய கண்டம்...'

பருவ மழை பெய்வதற்கு நீர் கூறும் காரணங்கள்?

"நான் எந்தக் காரணமும் கூறத் தயாராக இல்லை...'

பிரான்சில் ஓடும் மிகப் பெரிய நதி எது?

"விசா வரட்டும்; போய் விசாரித்து வருகிறேன்...'

ஊசியிலைக் காடுகள் என்றால் என்ன?

"ஊசியிலைக் காடுகள் தான்!'

பூமத்திய ரேகை எங்கே ஓடுகிறது'

"அது எங்கேயும் ஓடவில்லை; ஒரே இடத்தில் தான் இருக்கிறது...'

Wednesday, July 1, 2009

நீங்க ரொம்ப நல்ல டாக்டருங்கோ..

எந்த பேப்பர படிச்சாலும் இல்லை பெருசுகள பாத்தாலும் காய்கறிய தின்னு , குடிக்காதே , உடற்பயிற்சி பண்ணுனு தாளிச்சிட்டு இருக்காங்க . நாமெல்லாம் 3 நாளுக்கு ஒரு தடவை கோழிய பார்க்கலேனா கோழி சண்டைக்கு வந்துரும் .அதனாலேயே கோழிக்கு 3 நாளுக்கு ஒரு ஹாய் சொல்லி வாய்ல போடுறது வழக்கம் .நானும் இந்த் கொசு(அதான் இந்த அறிவுரை) தொல்லை தாங்க முடியாம ஒரு பிரபல டாக்டரிடம் போய் கேட்டுட்டு வருவோம்னு போனதுல கிடைத்த தகவலை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன் ...

1.டாக்டர் தினமும் இருதய சம்பந்தமான உடற்பயிற்சி செஞ்சா , அதிக நாள் வாழலாமா உண்மையா ?

இருதயம் எவ்வளவு துடிக்கனுமோ அதுக்கு ஒரு அளவு இருக்கு ஒவ்வொரு உடம்புக்கு ஏத்த மாதிரி அது வேறுபடும் .உடற்பயிற்ச்சி செஞ்சு இருதய துடிப்ப அதிகமாக்குவதால் அதிக நாள் வாழ்கைய நீடிக்க முடியாது.நீங்கள் சொல்வது எப்படி இருக்குனா ரொம்ப வேகமா கார் ஓட்டுனா கார் அதிக நாள் நல்லா இருக்கும்னு சொல்ற மாதிரி இருக்கு . அதனாலே உடற்பயிற்சி செஞ்சு உங்க நேரத்தை வீணடிக்காதீங்க.

2.நான் அசைவத்தை குறைத்து காய் கனிகளை அதிகமா சாப்பிடனுமா ?

உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா என்ன . கோழி,ஆடு,மாடு என்ன சாப்பிடுது? நெல்,பருப்பு,வைக்கோல் , புல்லு , புண்ணாக்கு,சோளம் .இதெல்லாம் காய்கறிகள் தானே ? அதனால ஆடு மாடு சாப்பிடும் காய்கறிகள் நம்ம உடலுக்குள் கோழி,ஆடு,மாடுகளை சாப்பிடும்போது இன்னும் பல சத்துக்களோடு நம் உடலுக்கு தானா வந்துரும்.

3.நான் மது குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டுமா ?
தேவையில்லை.மது அதில் இருந்து தயாரிக்கப்படுது? பழங்களில் இருந்துதானே.பீரும் மதுவும் தண்ணீர் எடுக்கப்பட்ட பழங்களில் இருந்து தயாரிக்கப்படுது.அதனாலே தண்ணீர் இல்லா பழம் உங்க உடலுக்கு போகுது. அதனால் நீங்க மது அருந்துவதை குறைக்க தேவையில்லை.

4.என்னுடைய உடம்பு/கொழுப்பு சதவீதத்தை எப்படி கணக்கீடுவது ?

அதாவது ஒரு உடம்பும் கொழுப்பும் உங்ககிட்ட இருந்தா ஒண்ணுக்கு ஓண்ணு. ரெண்டு உடம்பு ஒரு கொழுப்பு இருந்தா ரெண்டுக்கு ஓண்ணு இப்டிதான் ..

5.தினசரி உடற்பயிற்சியின் அவசியம் நண்மைகள் ?
இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. என்னோட தத்துவம் வலியில்லாமல் இருபபது மட்டுமே நல்லது.தினம் உடற்பயிற்ச்சி செய்து உடலை வருத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

6.எண்ணை அதிகம் சேர்த்துக்கொள்ளலாமா சமைக்கும் போது ?

நான் சொல்வதை கேக்குறீங்களா என்ன ? எண்ணை எதில் இருந்து எடுக்கிறார்கள் எள்ளு அல்லது ஏதாவது பருப்பு காய்கறியில் இருந்து . உடம்புக்கு காய்கறி பருப்பு சேர்ப்பது தப்புனு எப்பவாது சொன்னேனா நான் ?

7.அதிகமா உக்காந்து எந்திரிக்கும் பயிற்ச்சி செஞ்சா என் வயிற்றுப்பகுதி சின்னதாக மாறுமா ?

கண்டிப்பா மாறாது. அதிகமா வேலை குடுக்கும் தசைகள் பெரிதாக வளரத்தான் செய்யுமே தவிர சிறிதாகாது.பெரிய வயிறு வேணும்னா இதை நீங்கள் செய்யலாம்.

8.நீந்துவதால் நல்ல உடல் அமைப்பு கிடைக்குமா ?
தெரில ஆனால் தினம் நீந்துகிற திமிங்கலம் ஏன் இப்படி இருக்குனு சொன்னீங்கனா பரவால்ல.

9.கட்டமைப்பான உடல் உருவம் தேவையா ?
நல்ல குண்டான வட்டமானதும் உருவம்தான் ..

10.சாக்லேட் சாப்பிடலமா டாக்டர் ?
நீ இவ்ளோ நேரம் காத இங்க போட்டியா இல்ல பக்கத்துல உள்ள் நர்ஸ்ட்ட காதல் அம்பு விட்டியா.. சாக்லேட் எதில் இருந்து வருது . அதுவும் (சொல்ல தேவையில்லேனு நினைக்கிறேன் உங்களுக்கு தெரியும் )


இவருட்ட பேசிட்டு வெளிய வந்ததும்தான் அப்பாடானு இருந்துச்சு.நாமெல்லாம் தண்ணீர் இல்லாமல் கூட இருப்போம் ஆனால் நல்ல தண்ணீர்(வேறென்ன பீர்தான்) இல்லாமல் இருக்க முடியுமா.நீங்க ரொம்ப நல்ல டாகடர்னு சொல்லிட்டு வந்தேன் .. இந்த டாக்டர் பத்தி நீங்க நினைக்கிறத் இங்க எழுதிட்டு போங்க மக்கா..