Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Wednesday, June 3, 2009

திருமணம் - ஒரு சிறப்பு பார்வை


திருமணம் செய்து கொள்வது , ரெஸ்டாரண்டுக்கு நண்பர்களுடன் போவது போல தான்.நாம் நமக்கு பிடித்ததை கேட்டு வாங்கிகொண்டாலும் , மத்தவன் வாங்கினத பார்த்து நாமும் அத வாங்கியிருக்கனும் என்று எண்ணத்தோனும்.

திருமணத்திற்கு முன் ஒரு ஆண் பாதி வாழ்கை தான் வாழுகிறான் திருமணத்திற்கு பின் அவன் வாழ்க்கையே முடிந்தது.

திருமணம் ஒரு கல்வி நிலையம்,ஆண் தன் பேச்சிளர் பட்டத்தை இழக்கிறான் , பெண் மாஸ்டர் பட்டம் பெறுகிறாள்.

ஒரு மகன் தன் தந்தையிடம் ,கல்யாணம் பண்ண எவ்வளவு செலவாகும் , தந்தை ”தெரியலயேப்பா , நான் இன்னும் அதற்கு தான் பணம் செலவு பண்ணிக்கிட்டு இருக்கேன்”.

திருமணமான முதல் வருடம் கணவன் பேசிட்டே இருப்பான் , மனைவி கேட்பாள்,இரண்டாம் வருடம் மனைவி பேச கணவன் கேபட்பான்,மூன்றாம் வருடம் இருவரும் பேச பக்கத்து வீட்டுக்காரன் கேட்ப்பான்.

மனைவி இன்னொரு பெண்ணுடன் , “ நான் வந்த பின்புதான் இவர் இலட்சாதிபதி ஆனார் “ அதற்கு முன்னாடி “அவர் கோடீஸ்வரனா இருந்தார்”