Thursday, August 27, 2009

என்னத்த சொல்ல?

இரண்டு வாரங்களுக்கு முன்பு திருப்பதி சென்று வந்தேன் , பெங்களூர்ல இருந்து டிரெயின்ல கிளம்புனது முதல் பாக்குற அத்தனை பேரும் முகமூடி கொள்ளையர்கள் மாதிரி முகமூடிய போட்டு பயமுறுத்திக்கிட்டே வந்தாங்க. திருப்பதி போனாலும் நிக்கிற போலிஸ் ,சீட்டு கொடுக்குற அலுவலர் ,ரூம் ஒதுக்குற பணியாளர் , க்யூல பக்கத்துல நிக்கிறவர் முதல் பூசாரி வரை முகமூடி மயம்தான்.. பாவம் ஏழுமலையானுக்கு மட்டும் மாட்ட மறந்துட்டாங்க..

ஒரு வேளை ஏழுமலையான் அவரே பார்த்துக்குவாருனு விட்டுட்டாங்களோ ?

இந்த பன்னித் தொல்லை தாங்க முடியல ராமா.....

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

போன வாரம் உறவினரின் திருமணத்திற்க்காக முதல் நாள் இரவு மஹாலுக்கு செல்லும் வழியில் ஹைவே பேட்ரல் என்னை நிறுத்தினார்கள்.லைசென்ஸ் ,பைக் புக் இரண்டும் இல்லை என்னிடம்.அவர்கள் எடு என்று சொன்னதும் இல்லை என்று சொல்லிவிட்டேன்.ஊர் பேரு என்ன பண்றனு கேட்டதும் பெங்களூர்ல வேலை பாக்குறேன் கம்ப்யூட்டர் பொட்டி தட்டுறேனு சொன்னதும்.உன்மேல கேச போட்டு எங்க போய் தேடுறதுனு ஐயாவ போயி பாருனு இன்ஸ்கிட்டே அனுப்புனாங்க.இன்ஸ் சாருக்கும் அதே பதில சொல்லிட்டு கல்யாணத்துக்கா வண்டி எடுக்க வேண்டியாதாயிருச்சு இல்லேனா பைக்ல வந்திருக்கமாட்டேன் சார்னு சொன்னேன்.பக்கத்துல உள்ள ஏட்டு ஐயா எவ்ளோ வாங்கனு காத கடிச்சிட்டு இருக்கும் போதே போ தம்பினு இன்ஸ் பெரிய மனசோட அனுப்பி வச்சார்.நான் எப்போ செஞ்ச புண்ணியமோ முதல் நாள் நைட்டு அடிச்ச கிர்றாலே அன்னிக்கு உள்ள உபா ஏத்தல..

காசு வாங்கமா போலீஸ் விட்டுட்டாங்க அவ்ளோ நல்லவங்களாயிட்டாங்களா ?

அப்புறம் திரும்பவும் அன்னிக்கு மகாலுக்கு போய் சேரும் முன் வேறொரு இடத்துலயும் ஊத சொல்லிட்டு லைசென்ஸ் இல்லேனாலும் போக சொல்லிட்டாங்க..

ஒரு வேளை லைசென்ஸ் தேவை இல்லையோ இனி?

எது எப்படியோ எனக்கு பைசா மிச்சம்..
---------------------------------------------------------------------------------------------------------------------------------

ரெண்டு நாளைக்கு முந்தி வேலுபிரபாவின் காதல்கதை பார்த்தேன் .. சரியான தலைப்பு தேர்வு செய்திருக்கிறார்கள் படத்துக்கு.. அத்தனை காதல் கதைகள் அதும் வெரைட்டியான காதல கதைகள் , இளவயசு காதல்,நல்ல காதல், கலப்பு காதல்,காம காதல்,பெருசு காதல் ,கள்ள காதல்,பெருசு-சிருசு காதல் அத்தனை காதலும் ஒரே படத்தில்..

நல்லாத்தானே இருக்கு படத்துக்குள்ளே படம், என்ன கொஞ்சம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு யோசிச்சுபுட்டாப்புலய அதான் இங்கே ஓடலேனு நினைக்குறேன்..

---------------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, August 26, 2009

AND NOW!!!!!!!!!

ஏன்னு தெரியலை பத்து வருசத்துக்கு முந்தி மாதவனூர் ஊராட்சி
உங்களை வரவேற்குதுனு இருந்த பெருமையான ஒரு போர்ட மறைச்சு இப்போ யாதவர் பேரவை ,தேவேந்திரர் பேரவை,முக்குலத்தோர் பேரவை வரவேற்குதுனு ஊர் முழுக்க பல போர்டு சிருமையா..

ஏன் மக்கா இப்படி?


சந்தனமுல்லையின்
"And,Now"

ஆயில்யனின்
"And,Now"

நட்புடன் ஜமாலின்
"And,Now"

நிஜமா நல்லவனின்
"And,Now"

தமிழ் பிரியனின்
"And,Now"

முத்துலட்சுமியின்
"And,Now"

ஸ்ரீமதியின்
"And,Now"

நான் ஆதவனின்
"And,Now"

தமிழன் கறுப்பியின்
"And,Now"

சின்ன அம்மிணியின்
"And,Now"

பிராவகமின்
"And,Now"

கானா பிரபாவின்
"And,Now"

ஹரிணி அம்மாவின்
"And,Now"

அபி அப்பாவின்
"And,Now"

பிரியமுடன்......வசந்த்
"And,Now"