Tuesday, June 30, 2009

என்னவளுக்கு பிறந்தநாள்


நானும் இந்த உலகில் வாழ்வதற்கு ஆதாரமாய் இறைவன் படைத்த என் சரி பாதி ஆக போகும் என் கண்மணி சூரியாவுக்கு இன்று பிறந்த நாள் .என் இனியவளை உங்களுடன் சேர்த்து வாழ்த்துகிறேன் .


அளவில்லா அன்புடன்
தினேஷ்..

Monday, June 29, 2009

நாடோடிகள்

பசங்க படத்திற்க்கு பிறகு நல்ல படமா வந்திருக்குனு கேபிள் அண்ணன் , நாடோடி அண்ணன் (நாடோடி பற்றி நாடோடி.. ஆஹா) சொன்னாங்கனு நேற்று மதியம் கொஞ்சம் தாகசாந்தி அடைந்து தூக்கலா தூக்கத்த போட்ட என் அறை உடன்பிறப்புகளை உசுப்பி .. அவனுக கிட்ட நல்ல வார்தையில் திட்டு வாங்கி (என்ன நல்ல வார்த்தையில் திட்டானு நீங்க கேக்குறது கேக்குது) ..

பக்கத்துலேயே multiplex Pvr இருந்தாலும் 200 ரூ குடுத்து பார்க்க ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கே . அதனால புஷ்பாஞ்சலி தியேட்ட்ருக்கு போக முடிவெடுத்து 50 ரூ தான் டிக்கெட் ( மீதி 150 க்கு ஒரு நம்ம பிராண்ட் உற்சாக பானம் அருந்தலாம் பாருங்க அதான் 200 ரூ தியேட்டருக்கு போகாமா இப்படி .. நானெல்லாம் ஊர் திருவிழா அப்போ போடுற திரைப்படத்த விடிய விடிய தெருல உக்கார்ந்து பாக்குற ஆளு .. நமக்கு 50 ரூ டிக்கெட் கொடுத்து பாக்குறதே அதிகம் என்ன சொல்றீங்க ) ..

6 மணி படத்துக்கு அறையில் இருந்து 5.45 கிளம்பி 30 நிமிடம் பேருந்து பயணத்தில் உள்ள தியேட்டருக்கு போனோம் .ஹி ஹி நாமெல்லாம் என்னைக்கு நேரத்துக்கு போனோம் .பேருந்துல போகும்போது நான் கேபிள் அண்ணன் பதிவுல சொல்லியிருக்காரு , நாடோடி அண்ணன் சொல்லியிருக்காரு ,கார்த்திகை பாண்டி அண்ணன் சொல்லியிருக்காரு மற்றும் நம் பதிவர்கள் அனைவரும் சொல்லியிருக்காக படம் நல்லா இருக்குனு சொல்லிட்டு வந்தேன் . ஒருத்தன் மட்டும் எதையும் கேக்காம சிரிச்சிட்டே வந்தான் . என்னாடானு பார்த்தா பய சைக்கிள் கேப்புள படம் ஓட்டிட்டு இருக்கான் கண்கள் இரண்டால் உன் கண்கள்
இரண்டால்னு .. பார்த்துடா அறுத்துர (கழுத்ததான்) போராங்கனு சொன்ன பின்னாடிதான் பயபுள்ள சிரிப்ப நிப்பாட்டுச்சு ..

எல்லாரும் மிகுந்த எதிர்பார்புடன் தியேட்டர் வாசலுக்கு போனா , தியேட்டர்ல எதோ இடிச்சுட்டு கட்றாங்கனு மூடி கிடக்கு . அடங்கொய்யாலே இப்படி ஆயி போச்சுனு பக்கத்துல உள்ள தாக சாந்தி நிலையத்திலே சாந்தி அடைஞ்சிட்டு நாடோடி படம் பார்க்க போயி பாரோடி வந்தோம் ..

டிஸ்கி:
----
அடுத்த வாரம் பார்க்க பிளான் பண்ணியிருக்கோம் . பிளான் பண்ணமா பண்ணக்கூடாதுனு இப்பத்தான் உணர்ந்தேன் ...

நாடோடி படத்தை பத்தி எதிர்பார்த்து இங்க வந்து ஏமாந்த ஹி ஹி ஹி .. காத்திருக்கவும் .. இல்லேனா கேபிள் , நாடோடி அண்ணன தேடி போகவும் ..

Wednesday, June 17, 2009

புதிய தேர்வு விதிமுறைகள் - t20யின் தாக்கம்.

இந்த 20 - 20 கிரிக்கெட் ஃபீவர் வந்தாலும் வந்தாச்சு , நானும் எதாச்சும் போடானும்னு நினைச்சு ஒரு 120 MCய போட்டுட்டு மப்புள படுத்துக்கிட்டு உளருனது ..

1. தேர்வை ஒரு மணி நேரமாகவும் , 50 மதிப்பெண்களாவும் மாத்தனும்.

2. 30 நிமிடத்தில் ஒரு இடைவெளி விடனும் , அப்போ மாணக்கர்கள் உக்காந்து யோசிப்பாங்க ..

3. முதல் 10 நிமிடம் பவர் பிளே , தேர்வு கண்காணிப்பாளர் யாரும் அந்த நேரத்தில் தேர்வு அறையில் இருக்க கூடாது .
(உடனே எல்லோருக்கும் இதை கண்டிப்பா நடைமுறை படுத்தனும்னு தோணுமே!!!)

4. ஃப்ரீ ஹிட் - மாணக்கர்களே எதேனும் ஒரு கேள்வியும் பதிலும் எழுதி கொள்ளலாம்.

5. அப்புறம் தேர்வில் தப்பான கேள்வி வந்தால் என்னவேனா பதில் எழுதலாம் .(ஃப்ரீ ஹிட்) மார்க் உண்டு கண்டிப்பா . ஆனா ஒன்னும் எழுதாமா வெரும் பேப்பர் மட்டும் இருந்தா முட்டை மட்டும் தான்.

6.உற்சாக அழகிகள் தேர்வு அறையில் மாணக்கர்கள் எழுதும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் இடுப்ப நல்லா ஆட்டி உற்சாக படுத்தனும் .
(இப்படி இருந்தா கண்டிப்பா தேர்ச்சி சதவீதம் கூடும் என்ன சொல்றிங்க ?)


Wednesday, June 3, 2009

திருமணம் - ஒரு சிறப்பு பார்வை


திருமணம் செய்து கொள்வது , ரெஸ்டாரண்டுக்கு நண்பர்களுடன் போவது போல தான்.நாம் நமக்கு பிடித்ததை கேட்டு வாங்கிகொண்டாலும் , மத்தவன் வாங்கினத பார்த்து நாமும் அத வாங்கியிருக்கனும் என்று எண்ணத்தோனும்.

திருமணத்திற்கு முன் ஒரு ஆண் பாதி வாழ்கை தான் வாழுகிறான் திருமணத்திற்கு பின் அவன் வாழ்க்கையே முடிந்தது.

திருமணம் ஒரு கல்வி நிலையம்,ஆண் தன் பேச்சிளர் பட்டத்தை இழக்கிறான் , பெண் மாஸ்டர் பட்டம் பெறுகிறாள்.

ஒரு மகன் தன் தந்தையிடம் ,கல்யாணம் பண்ண எவ்வளவு செலவாகும் , தந்தை ”தெரியலயேப்பா , நான் இன்னும் அதற்கு தான் பணம் செலவு பண்ணிக்கிட்டு இருக்கேன்”.

திருமணமான முதல் வருடம் கணவன் பேசிட்டே இருப்பான் , மனைவி கேட்பாள்,இரண்டாம் வருடம் மனைவி பேச கணவன் கேபட்பான்,மூன்றாம் வருடம் இருவரும் பேச பக்கத்து வீட்டுக்காரன் கேட்ப்பான்.

மனைவி இன்னொரு பெண்ணுடன் , “ நான் வந்த பின்புதான் இவர் இலட்சாதிபதி ஆனார் “ அதற்கு முன்னாடி “அவர் கோடீஸ்வரனா இருந்தார்”

Tuesday, June 2, 2009

cofeeday - வயிற்றெரிச்சல்

ஞாயிற்றுக்கிழமை நானும் என் நண்பர்கள் இருவரும் வழக்கமாக சமையல் பொருட்கள் வாங்க டோட்டல்க்கு போனோம்.என் கூட வந்தவன் கையிலே கொஞ்சம் உணவு கூப்பன் வைத்திருந்தான்,அது பாக்கெட்ல கனமா இருந்துச்சு போல,மேலும் ரெண்டு மூணு பிகருக வேற அங்க இருந்துச்சு .என்னைக்கும் இல்லாத திருநாளா , வா மச்சான் cofeeday போய் ஒரு cofee குடிக்கலாம்னு சொன்னான்.சரி நம்ம காச , ஒசில கிடைச்சா எதுனாலும் சாப்பிட ரெடினு சொல்ற கூட்டம்ல நாம. வா மச்சான் போவம்னு போய் உக்காந்தாச்சு..

போய் உக்காந்து அஞ்சு நிமிசமாச்சு ஒரு பய பக்கத்துல வரல , உடனே நம்ம கூட வந்தவரு புரோட்ட 
கடையிலே கூப்பிடுற பழக்க தோசத்துல பாசு இங்க வாங்க அப்படினு ஒரு சவுண்ட விட்டாரு பாருங்க , பக்கத்துல உக்காந்த அத்தனை பேரும் ஒரு அபவ்டன் போட்டு மொத்தமா பார்வையிலேயே மொக்கி எடுத்தானுக.பயபுள்ளக அப்பவும் என்ன வேணும் கேட்டு ஒருத்தனும் வரல .

 சரிடானு சொல்லிட்டு எதோ மேசையிலே ஒரு அட்டை இருந்துச்சு , அதான் மெனு காடா இருக்கும்னு புரட்டி புரட்டி பார்ததா மொத்தமே ஒரு மூணு வெரைட்டி காஃபி போட்டிருந்துச்சு பேரு ஒண்ணும் விளங்கல , சரி எது கம்மி விலையில இருக்குனு பாத்து இத சொல்வம்டானு பக்கத்துல் உள்ளவண்ட சொன்னா ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி அந்த வழியா போற வர்ற புள்ளைகலெல்லாம் சைட் அடிச்சுக்கிட்டு இருக்காங்கே. அடங்கொய்யால ஏண்ட என்கிட்ட சொல்லலேனு ஒரு சண்டைய போட்டுட்டு , நானும் அதில் ஐக்கிமாயிட்டேன் .அப்பவும் ஒருத்தனும் வந்து என்ன வேணும்னு கேக்கல , ஒரு வேளை இதுக்குதான் cofee dayகு பிகருகல கூட்டிட்டு வர்றாங்கலோ ஒருத்தனும் தொந்தரவு பண்ணமாட்டானு.

கடைசியா வந்து மெனு கார்டு கொடுத்தான். அப்பா முதல்ல பார்த்தது (?) இதிலே நிறைய அயிட்டம் 
இருந்துச்சு (நம்ம அயிட்டம் விஸ்கி பிராண்டி இல்லப்பா).சரி இதிலே பாப்போம்னு தேடுனா நம்ம 
அயிட்டம்(அதான்பா விஸ்கி) கலந்து ஒரு காஃபி , உடனே மூணு பேருக்கும் அத சொல்லி கொண்டு வாங்கனு சொல்லிட்டோம்ல.பேரெல்லாம் தெரில.கொண்டு வரேன்னு சொல்லிட்டு போனவன் அதுக்கப்புறம் ஆள காணோம் .சரினு திரும்பவும் ஜோதில(ஃபிகருகல நோட்டம் விடுறதுதான்) கலந்தாச்சு.

ஒரு பத்து நிமிடம் கழிச்சு கொண்டு வந்து வச்சான்.காஃபி ஒரு டம்ளர்லயும்,ஒரு பாக்கெட்டும் , என்னடானு பாத்த சீனி.அடப்பாவி 60 ரு காஃபி வாங்கினா சீனி கலந்து கொடுக்க மாட்டிங்களாயா நாங்கதான் கலக்கனுமானு பக்கதுல உள்ளவன் கேட்டான்.சீனிய கலக்கி வாயில காஃபிய வச்சா சுடுதண்ணி மாதிரி அப்படியே இருக்கு , ஒரு பாக்கட் சீனி போட்டும் இனிப்பே இல்ல .சீனிய அந்த கலக்கு கலக்கினதுல இனிப்பு சேந்துச்சோ சேரலியோ ஆனா காஃபி உள்ள போனதும் எனக்குள் கலக்க ஆரம்பிச்சுருச்சு. மூனு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்து சிரிச்சுகிட்டே சூப்பரா இருக்குடானு சொல்லிக்கிட்டோம்.கஷ்டப்பட்டு சுடு தண்ணிய சாரி காஃபிய குடிச்சுட்டு கொய்யாலே இனி வாழ்வுக்கும் cofee day பக்கமே போககூடாதுனு ஒரு கும்பிட போட்டு வந்தேன்..

டிஸ்கி:
----
      200 ரூபாய்கு 3 காபி வாங்கி சாப்பிட்ட நாங்க , வீட்டிற்கு பக்கத்தில் உள்ள 3 ரூ டீ நல்லாவே 
இல்லேனு கடைக்காரன்கிட்ட சண்டை போடுற ஆளுக .